Posts

கடுமையான எபிகாஸ்ட்ரிக் வலி, / Acute epigastric pain,

Image
  கடுமையான எபிகாஸ்ட்ரிக் வலி , / Acute epigastric pain, எபிகாஸ்ட்ரிக் வலி என்பது விலா எலும்புகளுக்கு கீழே உள்ள மேல் வயிற்று வலி. எபிகாஸ்ட்ரிக் வலி என்பது அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் அஜீரணத்தின் பொதுவான அறிகுறியாகும். எபிகாஸ்ட்ரிக் வலி செரிமானம் தொடர்பான காரணங்களுக்கான வீட்டு வைத்தியம் அஜீரணம் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பொதுவான நிலைமைகளின் காரணமாக எபிகாஸ்ட்ரிக் வலிக்கு:   கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் காபி மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.   காரமான , கிரேவி உணவுகளை தவிர்க்கவும்.   பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் குடிக்கவும் (8 அவுன்ஸ் தண்ணீருக்கு 1 டீஸ்பூன்).   குமட்டலுக்கு , சூடான நீரில் அல்லது தேநீரில் மூழ்கிய இஞ்சி வேரை குடிக்கவும் (குடிப்பதற்கு முன் சிறிது ஆறவைத்து  குடிக்கவும்வும்).   சிறிய , ஆரோக்கியமான உணவை ஒரு நாளைக்கு பல முறை சாப்பிடுங்கள்.   இடது பக்கத்தில் ஒருக்களித்து படுங்கள் , ( Lie on your left side , ) இது அமில ரிஃப்ளக்ஸ் தடுக்க உதவுகிறது மற்றும் வாயுவை அனுப்ப உதவுகிறது. உங்கள் மேல் உடலை உயர்த்தி வைத்துக் கொள்ளுங்கள் , இது அமில ரிஃப்ளக்ஸ் தடுக்க உத

கண்புரை, / cataract,

Image
  கண்புரை , /  cataract, கண்புரை என்பது கண்ணின் லென்ஸில் உருவாகும் மேகங்கள் போற்ற ஒரு திரை விழுதல் ஆகும். . கண்புரை என்றால் என்ன என்பதை அறிவதனால், கண்புரை வகைகள் மற்றும் கண்புரை சிகிச்சைகள் பார்வை இழப்பு மற்றும் குருட்டுத்தன்மையைத் தவிர்க்க உதவும். நீங்கள் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்  என்று நீங்கள் சந்தேகித்தால் , உங்கள் பார்வையை பாதுகாக்க கண்புரை நோய் தன்மையை சரியாக கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுவது அவசியம்.   2050 ஆம் ஆண்டளவில் , கண்புரை உள்ளவர்களின் எண்ணிக்கை 24.4 மில்லியனிலிருந்து 50 மில்லியனாக இரு மடங்காக உயரும் என்று தேசிய கண் நிறுவனம் கணித்துள்ளது. கண்புரை ( cataract, ) என்றால் என்ன ? கண்புரை ( cataract, ) என்றால் கண்ணின் ஒரு பகுதி லென்ஸ் பதிப்பு என்று அழைக்கப்படுகிறது , மேலும் இது நீர் மற்றும் புரதத்தால் ஆனது. நாம் வயதாகும்போது , இந்த புரதங்கள் லென்ஸின் சில பகுதிகளுக்கு மேல் ஒரு மேகத்தை உருவாக்க முடியும். இந்த மேகம் கண்புரை என்று அழைக்கப்படுகிறது.   கண்புரை நோயின் முன்னேற்றம் காலப்போக்கில் நிகழ்கிறது என்று  கண்டறியப்பட்டாலும் கூட , இது சிகிச்ச

வரகு

Image
உடல் பருமனை குறைக்கும் வரகு அரிசி சிறுதானியமான வரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்குகிறது. உடல் பருமனை குறைக்கிறது. மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வரகு அரிசியை பயன்படுத்தி உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வரகு அரிசி, தயிர், பச்சை வெங்காயம், உப்பு. வரகு அரிசியுடன் தேவையான அளவு நீர்விட்டு சுமார் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பச்சை வெங்காயம், தயிர், உப்பு சேர்த்து சாப்பிடலாம். தினமும் காலையில் இதை சாப்பிட்டுவர உடல் பருமன் குறையும்.

ராகி

Image
  ராகி இது அனைவருக்கும் உகந்த ஊக்கமளிக்கக்கூடிய, சத்து மிகுந்த மலிவான உணவாகும். நம் முன்னோர்கள் நீண்ட காலம் நோயற்ற வாழ்வு வாழ்ந்தற்கு இது போன்ற சத்துள்ள தானியங்களை உணவாக உண்டதால் தான்....!!! ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். அரிசி உணவில், நெல்லை அரிசியாக மாற்றும் போது அதன் சத்துகள் அனைத்தும் தவிட்டிலும், உமியிலும் போய் விடுகிறது. ஆனால் ராகியிலோ அப்படியில்லை. ராகியை அப்படியே அரைத்து அதனை மாவாக உபயோகிக்க வேண்டும். தவிடு, உமி என்று பிரிக்க முடியாது ராகியின் பயன்கள் ரத்தம் சுத்தியாகும் எலும்பு உறுதிப்படும் சதை வலுவாக்கும் மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.

கிச்சலி சம்பா அரிசி

Image
கிச்சலி சம்பா அரிசி . .பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது நம்முடைய ஆரோக்கியத்துக்குப் பலனளிக்காது அதேநேரம் வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாக கிச்சலி சம்பா , வெள்ளை பொன்னி போன்றவை உள்ளன. கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும்அதுமட்டுமில்லாமல், அனைத்து வகையான பலகாரங்கள்

ஆரோக்யம் நல்கும் ‘சாத்வீக போஜனம்

Image
 ஆரோக்யம் நல்கும் ‘சாத்வீக போஜனம் மனிதர்களுக்கு மூன்றே மூன்று காரணங்களால் தான் உடல் ஆரோக்யம் கெடுகிறது. அந்தக் காரணங்கள் வாதம், பித்தம் மற்றும் கபம். இந்த மூன்றையும் சீராக வைத்துக் கொண்டால் நீங்கள் ஆரோக்யமானவர் என்று பொருள். இந்த மூன்றையும் எப்படி சீரக வைக்க முடியும் என்றால் நமது உணவுப் பழக்கத்தில் இருக்கிறது அதற்கான தீர்வு. மனித குணங்களை ரஜோ குணம், தமோ குணம், சத்துவம் அல்லது சாத்வீக குணம் என்று வகைப்படுத்தி இருப்பதைப் போல உணவுகளையும் நமது சித்தர்களும், முனிவர்களும் வகைப்படுத்தி இருக்கிறார்கள். அதன்படி ரஜோ குண இயல்பு கொண்ட உணவு வகைகளை அதிகம் உண்ணும் பழக்கம் கொண்டவர்களுக்கு கோபம், காமம், குரோதம் போன்ற ரஜோ குணங்கள் அதிகமிருக்கும். அதே போல தமோ குண இயல்பு கொண்ட உணவு வகைகளை அதிகம் உண்பவர்களுக்கு பசியின்மை, மந்தம், மூளைச்சோர்வு, அதீத தூக்க உணர்வு போன்ற பிரச்னைகள் இருக்கும். பொதுவாக மேற்கண்ட இரு குண இயல்பு கொண்ட உணவு வகைகளுமே உடல் ஆரோக்யத்துக்கு நல்லதல்ல. இந்த இரு வகை குண இயல்புகளையும் மட்டுப்படுத்தி இயல்பான தூக்கம், பசி, சுறுசுறுப்பான இயக்கம், ஆற்றல் போன்றவற்றுக்கு வித்திடும் சத்துவ குண

தூக்கம்

Image
தூக்கம் ஷிப்ட் மாறி மாறி போயாக வேண்டும். இரவு நேரஷிப்ட் முடிந்து காலை வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கலாமா இல்ல, கொஞ்சம் தூங்கிவிட்டு அப்புறம் சாப்பிடலாமா என்று தூக்கத்தை செட் பண்ணுவதற்குள் அந்த வீக்கே முடிந்துவிடுகிறது. சரியாகவே தூங்க முடியவில்லை. கண்ணெல்லாம் தீயாட்டம் எரியுது என்பார்கள் ஐ.டி. மக்கள். அடுத்த வாரம் ஈவினிங்ஷிப்ட். மாலை போய் இரவு லேட்னைட் வந்து சாப்பிடவும் முடியல, சாப்பிடாம படுத்தா தூக்கமும் வரலே.. அப்படி இப்படி புரண்டு படுத்து காலை 5 மணிக்குதான் தூக்கம் வந்துச்சு. எழுந்திரிக்கும் போது மதியம் 12 மணியாயிடுச்சு. கொளுத்தும் வெயில் வெளியே அடிக்குது. ஆனா நான் தூங்கி எழும் போது மனதுக்குள் காலை நேர உணர்வு தான் இருக்கு. அதனால் என்னால ஃப்ரீயா இருக்க முடியல. இந்த கால இடைவெளி மனச்சோர்வையும், எதிலும் ஆர்வமில்லாமல் மனசு இறுக்கமா இருக்கு என்பார்கள். இப்படி தூக்கம் செட் ஆவதற்குள் அடுத்தவாரம் பகல் ஷிப்ட் வந்துவிடும். அது செட் ஆவதற்குள் அடுத்தவாரம் மீண்டும் நைட் ஷிப்ட் வந்துவிடும். இப்படியாக ஐ-.டி. மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு கூடவே ஆரோக்யத்தையும் இளமையையும் தொலைத்துக்