ஆரோக்யம் நல்கும் ‘சாத்வீக போஜனம்
ஆரோக்யம் நல்கும் ‘சாத்வீக போஜனம்
மனிதர்களுக்கு மூன்றே மூன்று காரணங்களால் தான் உடல் ஆரோக்யம் கெடுகிறது. அந்தக் காரணங்கள் வாதம், பித்தம் மற்றும் கபம். இந்த மூன்றையும் சீராக வைத்துக் கொண்டால் நீங்கள் ஆரோக்யமானவர் என்று பொருள். இந்த மூன்றையும் எப்படி சீரக வைக்க முடியும் என்றால் நமது உணவுப் பழக்கத்தில் இருக்கிறது அதற்கான தீர்வு. மனித குணங்களை ரஜோ குணம், தமோ குணம், சத்துவம் அல்லது சாத்வீக குணம் என்று வகைப்படுத்தி இருப்பதைப் போல உணவுகளையும் நமது சித்தர்களும், முனிவர்களும் வகைப்படுத்தி இருக்கிறார்கள். அதன்படி ரஜோ குண இயல்பு கொண்ட உணவு வகைகளை அதிகம் உண்ணும் பழக்கம் கொண்டவர்களுக்கு கோபம், காமம், குரோதம் போன்ற ரஜோ குணங்கள் அதிகமிருக்கும். அதே போல தமோ குண இயல்பு கொண்ட உணவு வகைகளை அதிகம் உண்பவர்களுக்கு பசியின்மை, மந்தம், மூளைச்சோர்வு, அதீத தூக்க உணர்வு போன்ற பிரச்னைகள் இருக்கும். பொதுவாக மேற்கண்ட இரு குண இயல்பு கொண்ட உணவு வகைகளுமே உடல் ஆரோக்யத்துக்கு நல்லதல்ல. இந்த இரு வகை குண இயல்புகளையும் மட்டுப்படுத்தி இயல்பான தூக்கம், பசி, சுறுசுறுப்பான இயக்கம், ஆற்றல் போன்றவற்றுக்கு வித்திடும் சத்துவ குண உணவு வகைகளே உடல் ஆரோக்யத்துக்கு உகந்தது. அதென்ன சத்துவ குணம் என்கிறீர்களா? சத்துவ குணம் என்பது எல்லாவிதமான சூழலிலும் பதற்றமின்றி, கோப தாபங்கள் இன்றி நிதானமாகச் சிந்தித்து செயல்படக் கூடிய ஆற்றலை வழங்கும் தன்மையே சாத்வீகம். இந்தக் குணம் மனிதனின் உடல் ஆரோக்யத்தை மட்டுமே மேம்படுத்துவதில்லை... மன ஆரோக்யத்துக்கும் உகந்தது இது. அப்படிப்பட்ட........
Comments
Post a Comment